இலங்கையில் இரண்டாவது கொரோனா நோயாளி உயிரிழப்பு!

இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய இரண்டாவது நோயாளி உயிரிழந்துள்ளார் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 64 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்றுமுன்தினம் 60 வயதுடைய ஒருவர் கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் உயிரிழந்த நிலையில் இன்று இரண்டாவது நோயாளி உயிரிழந்துள்ளார்.
Previous Post Next Post