தண்ணீர்த் தொட்டிக்குள் தவறி விழுந்த சிறுமி பரிதாப மரணம்!

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பகுதியில் சிறுமி ஒருவர் தண்ணீர் தொட்டிக்குள் தவறி வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். யோகபுரம் மேற்கு பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பத்தில் அந்தப் பதியைச் சேர்ந்த இராகுலன் துஷானி (வயது-3)  என்பவரே வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

சிறுமியின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிறுமியின் தந்தையார் துணுக்காய் பிரதேச தமிழ்த் தாய் கலாமன்றத்தின் தபேலாக் கலைஞர் என்று தெரிவிக்கப்படுகிறது.
Previous Post Next Post