யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் 14 வயதுச் சிறுமி சடலமாக மீட்பு!

யாழ் இருபாலைப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று (20) மதியம் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

GS வீதி இருபாலை எனும் முகவரியை சேர்ந்த உதயகுமார் சந்தியா எனும் 14 வயது சிறுமியே வீட்டின் அறையொண்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post