பிரான்ஸில் கொலை செய்யப்பட்ட தாயும் மகளும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள்! (படங்கள்)

பிரான்ஸ் பாரிஸ் 95 மாவட்டமான Val-d'Oise இல் Saint-Ouen-l’Aumône என்ற இடத்தில் கடந்த 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வீடு ஒன்றில் இருந்து தாய் மற்றும் மகள் ஆகிய இருவரது சடலங்களை பொலிஸார் மீட்டிருந்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் உரும்பிராயைச் சேர்ந்த இராஜதுரை விஜயசிறி (வயது-51) மற்றும் இராஜதுரை டிலக்சனா (வயது-21) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களைத் தேடி பிரான்ஸ் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொல்லப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் இரு மகன்களும் பொந்துவாஸ் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

தொடர்புடைய செய்தி: 
Previous Post Next Post