யாழில் இளம் குடும்பப் பெண் மாயம்! தாயைத் தேடும் 6 வயதுப் பெண் குழந்தை!!

சங்கானை வைத்தியசாலை வீதியில் வசித்து வந்த கபில் ஜூலக்சனா என்பவர் கடந்த நாற்பது நாட்களாக காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண்ணிற்கு 6 வயதுடைய பெண் குழந்தை ஒன்று உள்ளது எனவும் அக் குழந்தை தாய் காணாமல் போனதில் இருந்து ஏக்கத்துடன் காணப்படுவதாக கூறப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

எனவே, குறித்த பெண் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் 0712100557 எனும் அவரது கணவரின் தொலைபேசி இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் – கணவர்
Previous Post Next Post