ஊரடங்கு தளர்வு தொடர்பில் திடீர் நேர மாற்றம்!

மே 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 10.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

மே 26ஆம் திகதி செவ்வாய் முதல் கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கிடையே போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்படும்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் சுமார் 2 மாதங்களுக்குப் பின் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது. நாளை, 24 ஞாயிறு மற்றும் 25 திங்கள் ஆகிய இரு தினங்களும் நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post