பிரான்சில் அகதி தஞ்சம் கோரியுள்ளவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

எதிர்வரும் 11.05.2020 திங்கட்கிழமையில் இருந்து அகதிகளுக்கான தேசிய நீதிமன்றம் (Cour Nationale de Droit d'Asile) விசாரணைக்கான அழைப்புகளை அனுப்பவுள்ளது.

இந்த அழைப்புகள் ஏற்கனவே வேறு காரணங்களாலும், கொரானா வைரஸ் தாக்கத்தாலும் விசாரணை செய்யப்படாமல் ஒத்திவைக்கப்பட்டவை. ஒரு நீதிபதி மட்டும் விசாரிக்கும் அரசியல் தஞ்ச மேல்முறையீட்டு (Réexamen) வழக்குகள்.

வழமையான 3 நீதிபதிகளால் விசாரிக்கப்படும் வழக்குகள் .என்ற வரிசைப்படியே அழைப்புகள் அனுப்பப்படவுள்ளன.

ஒரு நீதிபதியைக் கொண்ட முதலாவது விசாரணை 27.05.2020 அன்று ஆரம்பிக்கவுள்ளது. 3 நீதிபதிகளைக் கொண்ட விசாரணைகள் 11 அல்லது 12 ஜூன் 2020 ஆரம்பிக்கவுள்ளது.

அகதிகளுக்கான தேசிய நீதிமன்றம்(Cour Nationale de Droit d'Asile) 03.08.2020 ல் இருந்து 14.08.2020 வரை கோடைவிடுமுறைக்காக மூடப்படவுள்ளது.
Previous Post Next Post