யாழில் தேவாலயத்திற்குள் புகுந்த மர்ம நபர் கைது! பொலிஸார் தீவிர விசாரணை!!

யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலய (பெரிய கோவில்) வளாகத்துக்குள் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கைது நடவடிக்கை இன்று நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் தற்போது யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் தடுத்துவைத்து விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளார்.

மன்னார் பேசாலை தேவாலயத்தில் நேற்றுமுன்தினம் நடமாடிய மர்ம நபர் தொடர்பில் வடக்கு மாகாணம் முழுவதும் விசாரணைகள் முடக்கிவிடப்பட்ட நிலையில் இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
Previous Post Next Post