தேசியப் பட்டியல் விவகாரம்! சம்பந்தன் குத்துக்கரணம்!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
"இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் விவகாரம் தொடர்பில் நான் பதிலளிக்கமாட்டேன். இது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் துரைராஜசிங்கத்திடம் கேட்கவும். அவர்தான் இந்த விடயதானத்துக்குப் பொறுப்பு." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் அதன் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கே வழங்க வேண்டும் என்று கட்சியின் யாழ். மாவட்டக் கிளை தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.


எனினும் அந்தத் தீர்மானத்தை மீறி அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் தவராசா கலையரசனுக்கு தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டுள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியாகியுள்ளது.

இதையடுத்து தமிழரசுக் கட்சி மட்டுமல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளும் கடும் அதிருப்தியடைந்துள்ளன.

இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வினவியபோது, "இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் யாருக்கு உரியது என்பதை கட்சியின் பொதுச்செயலாளர் துரைராஜசிங்கமே தேர்தல்கள் செயலகத்துக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார். எனவே, இந்த விவகாரம் தொடர்பில் நான் பதிலளிக்கமாட்டேன். இது தொடர்பில் துரைராஜசிங்கத்திடம் கேட்கவும். அவர்தான் இந்த விடயதானத்துக்குப் பொறுப்பு" - என்று தெரிவித்தார்.


இதேவேளை சம்பந்தன், சுமந்திரன், சிறிதரன் ஆகியோரின் கூட்டுச் சதியினால்தான் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் மாவை சேனாதிராஜாவுக்கு வழங்காது கலையரசனுக்கு வழங்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிற்து.

இந் நிலையில் சம்பந்தன் இதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post