சுவிஸில் இலங்கைத் தமிழ்ப் பெண்ணைக் கொ*லை செய்த கணவன் மற்றும் சகோதரன்! நீதிமன்றம் விதித்த தண்டனை!!

சுவிட்சர்லாந்தில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவரை படுகொலை செய்த கணவன் மற்றும் அவரது சகோதரருக்கு நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

திட்டமிட்ட வகையில் மனைவியை கொ*லையை செய்த கணவனுக்கு 19 வருடங்கள் சிறைத் தண்டனையும் சகோதரனுக்கும் ஆயுள் தண்டனையும் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடந்த வருடம் செப்டம்பர் 11ஆம் திகதி சுவிட்ஸர்லாந்தின் டிசினோ பகுதியில் வசித்து வந்த இலங்கையைச் சேர்ந்த 40 வயது பெண்மணி, மர்மமான முறையில் உயி*ரிழந்தார்.

குற்றவாளிகள் இணைந்து கொ*லை செய்த நிலையில், இயற்கையான மர*ணம் என நாடகமாடியதாக நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

கொ*லை செய்யப்பட்ட தமிழ் பெண் உறங்கிக் கொண்டிருந்த போது, கணவர் மற்றும் அவரது சகோதரர் ஆகிய இருவரும் சேர்ந்து அவர் மீது பாய்ந்துள்ளனர்.

பெண்ணின் தலையில் பிளாஸ்டிக் பையை மாட்டி, சுமார் 10 நிமிடங்கள் மூச்சுத் திணறச் செய்து அவரைக் கொ*லை செய்துள்ளனர்.

பின்னர், அவர் தூக்கத்திலேயே இயற்கையாக இறந்தது போல் காட்டுவதற்காக உடலை நகர்த்தி வைத்துள்ளனர்.

இந்த நாடகம்த்தை ஒஸ்கார் விருதுக்கு தகுதியானது என்று நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post