யாழில் தாய் திட்டியதால் விஷம் அருந்தி உயிரை மாய்த்த மகன்!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
தாயார் திட்டிய மன விரக்தியில் விஷம் அருந்தி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் கோப்பாய் மத்தி பகுதியைச் சேர்ந்த குகதாஸ் தினேஷ் (18) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


கோப்பாய் மத்திப் பகுதியில் வசித்து வரும் குறித்த இளைஞன் கடந்த 12ஆம் திகதி மாவா போதைப் பொருளுடன் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இளைஞன் தொடர்ச்சியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததால் தாயார் இளைஞனை பேசியுள்ளார். இதனால் விரக்தி அடைந்த இளைஞன் வீட்டை விட்டுகடந்த 13 ஆம் திகதி வெளியேறியுள்ளார்.

வீட்டுக்கு அருகில் உள்ள வாழை தோட்டத்தில் வைத்து விஷமருந்தியுள்ளார்.


உடனடியாக கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அன்றைய தினம் மாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இறப்பு தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற் கொண்டார்.
Previous Post Next Post