பருதித்தித்துறை மீனவர்கள் இருவருக்கு நடுக்கடலில் நேர்ந்த கொடுமை!


யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பருத்தித்துறை மீனவர்கள் இருவர் வெளிமாவட்டங்களைச் சேர்ந் மூன்று படகுகளில் சென்ற நபர்களால் எட்டு மணி நேரம் நடுக்கடலில் தடுத்துவைக்கப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

பருதித்தித்துறை எரிஞ்சஅம்மன் கோவிலடி பகுதியைச் சேர்ந்த மயிலிட்டி மீனவர் சமாசத்தினைச் சேர்ந்த மீனவர்கள் இருவர் நேற்று மாலை மீன்பிடிப்பதற்காக படகில் சென்றிருக்கின்றனர். நாகர்கோவில் கடற்பரப்பில் மாலை 6.30 மணியளவில் 40 கோஸ் பவர், சுசுக்கி இயந்திரம் பொருத்தப்பட்ட மூன்று படகுகளில் சென்ற நபகர்கள் பருதித்துறை மீனவர்கள் பயணித்த படகினை சுற்றிவளைத்ததுடன் அவர்களின் படகினை தமது படகுடன் இணைத்து கட்டி வைத்திருக்கின்றனர்.

அதன் பின்னர் தாம் கொண்டு சென்ற ஹெல்மெற்களால் கடுமையாகத் தாக்கியிருக்கின்றனர். தாக்கும் போது கடலட்டை பிடிக்கும் நடவடிக்கைக்கு எதிராக நீங்கள் தானே செயற்பட்டு வருகின்றீர்கள் என்று கேட்டு கேட்டுத் தாக்கியதாகவும் அதிகாலை 2.30 மணிக்குப் பின்னரேயே தாம் திரும்ப அவர்கள் அனுமதித்ததாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

விடுவிக்கும் வரையில் தாம் இரத்தம் சொட்டச் சொட்ட தாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பருதித்துறை பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்பின்னர் மீனவர்கள் பருதித்திதுறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post