யாழில் மேலும் மூவருக்குக் கொரோனா! மொத்தத் தொற்று 73 ஆக உயர்வு!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
மருதனார்மடம் பொதுச் சந்தை கொரோனா வைரஸ் கொத்தணியில் மேலும் 3 பேருக்கு கோவிட் – 19 நோய்த் தொற்று உள்ளமை இன்று (டிசெ. 17) வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதன்மூலம் மருதனார்மடம் கொரோனா வைரஸ் கொத்தணியின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 73ஆக அதிகரித்துள்ளது.

அடையாளம் காணப்பட்ட மூவரும் மருதனார்மடம் வியாபாரிகளுடன் நேரடித் தொடர்புடையவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று அடையாளம் காணப்பட்டவர்களில் 
  • இணுவில் - 01
  • மானிப்பாய் - 01
  • சண்டிலிப்பாய் - 01
என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 418 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவற்றில் 3 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஏனைய 415 பேருக்கும் தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
Previous Post Next Post