யாழில் இரண்டாவது சோதனையில் ஒருவருக்குக் கொரோனாத் தொற்று உறுதி!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
மருதனார்மடம் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் கொத்தணியில் மேலும் ஒரு வியாபாரிக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் இன்று (டிசெ. 25) வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் இவர்களுக்கு தொற்று உள்ளதாக அறிக்கை கிடைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இதன்மூலம் மருதனார்மடம் கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்ட 15ஆவது நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 105ஆக உயர்வடைந்துள்ளது.

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 42 வயதுடைய மருதனார்மடம் சந்தை வியாபாரிக்கே இவ்வாறு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மருதனார்மடம் சந்தை வியாபாரிகள் சுயதனிமைப்படுத்தப்பட்ட 14ஆவது நாளான இன்று இரண்டாவது முறையாக மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

அதன்போதே அவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வுகூடத்தில் இன்று 124பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 70 பேர் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரவையும் 54 பேர் தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரியையும் சேர்ந்தவர்கள்.

இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் இன்று பிசிஆர் பரிசோதனை இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post