யாழ். வடமராட்சி கடற்கரையில் எலும்புக்கூடாக கரையொதுங்கிய சடலம்!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்., வடமராட்சி கிழக்கு கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் எலும்புக்கூடாக சடலமொன்று கரையொதுங்கியுள்ளது.

செம்பியன்பற்று வடக்கு கிராமத்துக்கும் தனிப்பனை கிராமத்துக்கும் இடைப்பட்ட கடற்கரைப் பகுதியிலேயே எலும்புக்கூடாக குறித்த சடலம் கரையொதுங்கியுள்ளது.

இன்று மாலை இதனை அவதானித்த பிரதேச மக்கள், பளைப் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவம் தொடர்பில் மேல் நடவடிக்கையைப் பளைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post