எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
முல்லைத்தீவு வவுனிக்குள குளக்கட்டு வீதி வழியாகப் பயணித்த வாகனம் நேற்று குளத்துக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.
அதில் பயணித்த வவுனிக்குளம் செல்வபுரத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் அவரது 03 வயது மகள் மற்றும் அயல் வீட்டைச் சேர்ந்த 13 வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்திருந்தனர்.
ரவீந்திரன் (வயது-37), அவரது மகள் ரவீந்திரன் சார்ஜனா (வயது-3) மற்றும் அயல் வீட்டைச் சேர்ந்த இரவீந்திரகுமார் சஞ்சீவன் (வயது-13) ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.