யாழ். அரியாலையில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழப்பு! (வீடியோ)

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணம் அரியாலையில் தொடருந்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று முற்பகல் அரியாலை நாவலடியில் இடம்பெற்றது.

மோட்டார் சைக்களிலில் பயணித்த அவர் ரயில் பாதுகாப்பற்ற கடவையை கடக்க முற்பட்ட போது, தொடருந்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகினார் என்று தெரிவிக்கப்பட்டது.

உடுவிலைச் சேர்ந்த விஸ்வநாதன் பாலரூபன் (வயது-42) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post