![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-Oi8c0tXlqCEQNbzbSRUM6x_Bx1cl3hHlEjqW5AmVjxCG7D_dZ8zXmzkqxals58ioePo73T3JwE7AJRkPFrLSLWTa1hAn-TK5YuzE0eUFeYc192fkbczTAnL1pf3_9JefmWRfWEHK_ycDfDHdr9YNCjLawyY8V4X5C0OIunYTZETfs4WwsOFn3xLO/s16000/00a.jpg)
நேற்றைய தினம் (21.03.2023) மாலை ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், ஏனைய மூவரினதும் சடலங்கள் இன்றைய தினம் (22.03.2023) காலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 பேர் கொண்ட இளைஞர்கள் குழு ஒன்று, நேற்று முற்பகல் அங்கு நீராடச் சென்ற போது, அவர்களில் 4 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.
கல்முனை, காத்தான்குடி மற்றும் சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த, 20 முதல் 22 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களே இவ்வாறு காணாமல்போயிருந்தார்கள்.
அவர்களைத் தேடும் பணிகளில் பொலிஸார், மீட்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.