![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjoMoXe-nRdENJyJR88Ox16h7tpOHaVAwzSRTvRi5uq6bfKgu2eSK-PDYvYWvgmYJcDrX2jSUR2b8i1lJABiTDH2uHCJajYIQ6YLpn9Jn35SD0upWvA90iL8k_hM6K7P7lKb-M6zpBq2WxPC3th5x93rD1Rq-qSUnpWUVJNfr5Pw-enkmSxzaxuyHgQ/s16000/0f32d1a1-d0c6e8ef-42c539f3-jaffna-teaching-hospital_850x460_acf_cropped_850x460_acf_cropped.jpg)
காயங்களுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த இருவர் இன்றைய தினம் புதன்கிழமை வைத்தியசாலை நோயாளர் விடுதிக்குள் தமக்குள் மோதிக்கொண்டனர்.
அதனை அடுத்து இருவருக்கும் இடையிலான மோதலை வைத்திய சாலை பாதுகாப்பு பிரிவினர் தடுத்து நிறுத்தியதுடன் , வைத்தியசாலை பொலிஸாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
அதனை அடுத்து பொலிஸார் இருவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.