பஸ்ஸில் தவறவிடப்பட்ட பணம், தொலைபேசியை உரியவரிடம் ஒப்படைத்த பருத்தித்துறை சாலை காப்பாளர்!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பேருந்தில் தவறவிடப்பட்ட பணம் மற்றும் கைத் தொலைபேசியை உரியவரிடம் ஒப்படைத்த பருத்தித்துறை சாலையின் காப்பாளர் பாலமயூரனுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு – பருத்தித்துறை சேவையில் ஈடுபட்ட பேருந்தில் தவறவிடப்பட்ட 2 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் பணத்தையும் சுமார் 70 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கைத் தொலைபேசியையும் அவர் மீட்டிருந்தார்.

அதனை உரிமையாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தார்.

அவற்றை தவறவிட்டவரை அடையாளம் கண்டு பருத்தித்துறை சாலைக்கு இன்று அழைத்து அவரிடம் பணம் மற்றும் கைத் தொலைபேசியை பாலமயூரன் ஒப்படைத்தார்.
Previous Post Next Post