நாளை இரவு முதல் திங்கள் அதிகாலை வரை பயணத் தடை! அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையில் அனுமதி!!


நாளை இரவு 11 மணி தொடக்கம் எதிர்வரும் திங்கள் கிழமை அதிகாலை 4 மணிவரை நாடு முழவதும் பயணத்தடை அமுல்படுத்தப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தொிவித்திருக்கின்றார்.

இந்த காலத்தில் பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டிருக்கின்றது. எனினும் மேல் மாகாணத்தில் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்பவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இருப்பினும் அத்தியவசிய சேவைகளுக்கு இந்த பயணத் தடை பொருந்தாது என்றும் இராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டார்.

 அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையில்  அனுமதி

இதேவேளை நாளை இரவு 11 மணி தொடக்கம் 17ம் திகதி திங்கள் கிழமை அதிகாலை 4 மணிவரை பயணத்தடை அமுல்படுத்தப்படவுள்ள நிலையில் ஒரு குடும்பத்திலிருந்து ஒருவர் மட்டும் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையிலேயே வெளியே செல்லும் அனுமதியும் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டை விட்டுச் செல்லும் நடைமுறை நாளை முதல் அமுலாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, வேலை தவிர வேறு காரணங்களுக்காக வீடுகளை விட்டு வெளியேறும் மக்கள் அடையாள அட்டைகளை காட்டி வெளியே செல்லமுடியும் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, 

அடையாள அட்டை இல்லாதவர்கள் கடவுச்சீட்டு அல்லது வாகன சாரதி அனுமதி பத்திரத்தை பயன்படுத்த முடியும் என்றும் அறிவித்துள்ளார்.

01. அடையாள அட்டையின் இறுதி இலக்கமான 1,3,5,7,9 உள்ளவர்கள் ஒற்றை நாட்களில் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள். இறுதி இலக்கமான 0, 2,4,6,8 ஐ கொண்டவர்கள் இரட்டை நாட்களில் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.

02. அடையாள அட்டை இல்லாதவர்கள் கடவுச்சீட்டு அல்லது வாகன சாரதி அனுமதி பத்திரத்தை பயன்படுத்த முடியும்.

03. வேலைக்கு செல்பவர்கள், அத்தியாவசிய சேவைகளை வழங்குபவர்கள் அல்லது மருத்துவ சேவைகளை வாங்குபவர்களுக்கும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் இந்த நடைமுறை பொருந்தாது.

04. வீட்டை விட்டு வெளியேறும் ஒவ்வொருவரும் அவர்களின் அடையாள அட்டையை கொண்டு செல்வது அத்தியாவசியம்.
Previous Post Next Post