அம்மாச்சி உணவகத்தில் பணியாற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கும் உணவுப் பொதி! (படங்கள்)

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக நடைமுறையில் உள்ள பயணத் தடை உத்தரவு காரணமாக நாளாந்த வருமானம் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் தெய்வேந்திரம் கிரிதரன் தலைமையில், யாழில் உள்ள அம்மாச்சி எனும் உணவகத்தில் பணியாற்றும் பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட குடும்பங்களுக்கும் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளது. 

42 குடும்பங்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளது.










Previous Post Next Post