கனடாவில் விபத்து! யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் உயிரிழப்பு!!


கனடாவில் நடந்த வீதி விபத்தொன்றில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கனடா, ஒன்ராறியோ, நோர்த் பை அருகே கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் ஸ்காபொரோவைச் சேர்ந்த ஆனந்தராம் மதுரா (வயது-31) என்ற பெண்ணே உயிரிழந்தவர் ஆவார்.

நெடுஞ்சாலை 11 இல் படகொன்றை இழுத்துச் சென்ற வாகனம் குறித்த பெண்ணின் வாகனத்துடன் மோதியதிலேயே இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Previous Post Next Post