யாழ்.பருத்தித்துறையில் ஆணின் சடலம் மீட்பு! (படங்கள்)

பருத்தித்துறை சுப்பர்மடத்தில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வைரவ நாகரட்ணம் (78) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.

இன்று அதிகாலையில் பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டது என்று பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

கோப்பாய்ப் பகுதியைச் சேர்ந்த குறித்த முதியவர், தனது திருமணமான மகனிடம் கரவெட்டி பகுதிக்கென வந்தவர் என்றும் வழி தவறு சுப்பர்மடம் பகுதிக்கு சென்றிருக்காலம் என்றும் ஊகிக்கப்படுகிறது.
Previous Post Next Post