யாழில் நள்ளிரவு நடந்த கொடூரம்! இளம் குடும்பஸ்தர் கத்தியால் குத்திக் கொலை!!



இரண்டாம் இணைப்பு:

நேற்று நள்ளிரவு வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவில் இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மதுபோதையில் இருந்த மனைவியின் சகோதரியின் கணவரே இந்த கத்திக் குத்து தாக்குதலை நடத்தியுள்ளார். நேற்று இரவு மதுபோதையில் அவர்களின் வீட்டிற்கு 23 வயதான அந்த நபர் வந்தபோது அவருக்கு பிறிதொருவருடன் பிரச்சனை ஏற்பட்டிருந்தது.

மைத்துனர் வீட்டுக்கு வந்து, பிரச்சனைப்பட்ட நபரை தகாத வார்த்தைகளால் அவர் சத்தமிட்டு பேசியுள்ளார்.

இதன்போது மைத்துனர் , தகாத வார்த்தைகளால் பேசுவதை கண்டித்த நிலையில், ஆத்திரமடைந்த சந்தேக நபர், எதுவும் பேசாமல் தன்னுடைய மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்ட இடத்திற்கு சென்று, மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த கத்தியை எடுத்து வந்து, மைத்துனர் எதிர்பாராத தருணத்தில் அவர்மீது தாக்குதை மேற்கொண்டுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் ஊரணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்கையில் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து கத்திக்குத்தை நடத்திய 23 வயதான மைத்துனர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடி விட்டார். அவரது மோட்டார் சைக்கிளில் இரண்டு கத்திகள், ஒரு பொல்லு என்பன இருந்ததாக கூறப்படும் நிலையில் , சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலீஸார் நடத்தி வருகிறார்கள்.

முதலாம் இணைப்பு: 

குடும்பத் தகராறு காரணமாக 2 பிள்ளைகளின் தந்தை கத்தியால் குத்தம்ப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறை வல்வெட்டியில் நள்ளிரவு 12.30 மணிக்கு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளனர்.

சம்பவத்தில் படுகாயடைந்த அவரை உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்ககு அழைத்துச் சென்று அனுமதித்த போதும் அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

சம்பவத்தில் சுப்பிரமணியம் கிருசாந்தன் (வயது-30) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே கொல்லப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post