யாழில் இரு குழுக்களுக்கிடையில் வாள்வெட்டு மோதல்! இருவர் காயம்!!

யாழ். நாவற்குழி புதிய குடியேற்றத் திட்டம் குடியிருப்பு பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வாள்வெட்டு தாக்குதலில் முடிவடைந்துள்ளது.

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி புதிய குடியேற்றத் திட்டம் குடியிருப்பு பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் நடைபெற்ற வாள் வெட்டுத் தாக்குதலில் 2 பேர் காயமடைந்துள்ளனர்.

இதில் 20, 21 வயது இளைஞர்களே காயமடைந்துள்ளதுடன், இருவரும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post