யாழில் இளம் குடும்பப் பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!


யாழ்ப்பாணத்தில் தவறான முடிவெடுத்து இளம் பெண் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.

இச் சம்பவத்தில் உரும்பிராய் தெற்கு, செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த தீனுஷ் ரொசாந்தி (வயது-24) என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

குறித்த யுவதி நேற்று மாலை 4 மணியளவில் தனது வீட்டிற்குள் தூக்கில் தொங்கி நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
Previous Post Next Post