முல்லைத்தீவுக் கடலில் மூழ்கிய மூன்று இளைஞர்களில் ஒருவரின் சடலம் மீட்பு! (படங்கள்)


முல்லைத்தீவு மணல்குடியிருப்பு கடலில் இறங்கிய மூன்று இளைஞர்கள் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றது.

சம்பவத்தில் வவுனியா மதகுவைத்த குளம் பகுதியைச் சேர்ந்த மனோகரன் தனுஷன் (வயது -27), வவுனியா தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரன் தர்சன் (வயது 26) மற்றும் மதகுவைத்த குளம் பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் சகிலன் (வயது-26) ஆகிய மூவருமே கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.

அவர்களைத் தேடும் பணி கடற்படையினர் மற்றும் மீனவர்களினால் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்டவரின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.





Previous Post Next Post