கனடாவில் காணாமல்போன யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதி உயிரிழப்பு! (படங்கள்)

கனடாவில் காணாமல்போனதாக தேடப்பட்டு வந்த தமிழ் பெண் பிரசாந்தி அருச்சுனன் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

28 வயதான பிரசாந்தி அர்ச்சுனன் என்பவர் கடந்த 16ஆம் திகதி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டு பொலிசாரால் தேடப்பட்டு வந்தார்.

மேலும் அவரைக் கண்டுபிடிக்க உதவுமாறும் பொலிசார் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

குறித்த யுவதி கடைசியாக ஜனவரி 16, 2022 அன்று இரவு 7:45 மணிக்கு ஜேன் ஸ்ட்ரீட் மற்றும் ஃபின்ச் அவென்யூ வெஸ்ட் பகுதியில் காணப்பட்டதாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்ததது.

இந்நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்த 26 வயதுடைய பிரசாந்தி அர்ச்சுனன், யாழ்ப்பாணம் வேலணையைப் பிறப்பிடமாகவும், கனடா நோர்த் யோர்க்கை வதிவிடமாகவும் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post