யாழில் கடிதம் எழுதி வைத்து விட்டு உயிரை மாய்த்த இளம் பெண்! (படங்கள்)

யாழ். நீர்வேலி அச்செழுப் பகுதியில் இளம் யுவதி ஒருவர் விபரீத முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

நேற்றுச் செவ்வாய்க்கிழமை மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் மதுரா வயது 27 என்ற யுவதியை உயிரிழந்தவராவார்.

சடலம் ஆதார வைத்தியசாலையில் உடல் கூற்று சோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த பெண் கடிதம் எழுதி வைத்துவிட்டு தவறான முடிவெடுத்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். காதல் தோல்வியே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்று முன்தினம் திங்கட்கிழமை வடமராட்சிப் பகுதியில் இளம் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post