பிரான்ஸில் கருணைக் கொலை செய்யப்பட்ட யாழ்.இளைஞன்! காப்பாற்றப்பட்டது 8 உயிர்!!

உயிரிழந்த பின்னரும் எட்டுப் பேரைக் காப்பாற்றியுள்ளார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர். அவரது உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டு, உயிரிழக்கும் நிலையில் இருந்தவர்களே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் தெல்லிப்பழையைச் சேர்ந்த பகீஸ்வரன் சாருஜன் (வயது-29) என்பவரே கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் அவர் திடீரென மயக்கமடைந்துள்ளார். அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று, அதி தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. எனினும் அவர் மூளைச்சாவடைந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

வைத்தியர்கள் பகீரதப் பிரயத்தனம் செய்தும் அவரை காப்பாற்ற முடியாதென்ற நிலையேற்பட்ட போது, உறவினர்களின் சம்மதத்துடன் அவர் கருணைக் கொலை செய்யப்பட்டார்.

தனது உடல் உறுப்புக்களை தானம் செய்ய வேண்டும் என அவர் தனது விருப்பத்தை ஏற்கனவே வெளிப்படுத்தியதன் அடிப்படையில் அவர் உயிரிழப்பதற்கு முன்னதாக அவர் உடல் பாகங்கள் தானம் செய்ய முடிவெடுக்கப்பட்டது.

இதன்படி இருதயம் மற்றும் ஈரல் பிரச்சினையால் உயிரிழக்கும் நிலையில் இரண்டு நோயாளர்கள் இருக்கும் விடயம் தெரியவரவே, அவர்களுக்கு அந்தப் பாகங்கள் தானமாக வழங்கப்பட்டது. விசேட உலங்குவானூர்தி மூலமாக இருதயம் கொண்டு செல்லப்பட்டு அந்த நோயாளிக்கு மாற்றப்பட்டது.

இருதயம், ஈரல் மாற்றப்பட்ட பிரான்ஸ் நாட்டவர்கள் உயிர் பிழைத்தனர்.

இதயம், ஈரல், நுரையீரல், பித்தப்பை, சிறுநீரகம், விழித்திரை உள்ளிட்ட எட்டு உடல் பாகங்களை சாருஜன் தானம் செய்தார்.

பிரான்ஸ் ஊடகங்கள் இந்தச் சம்பவத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டுள்ளன.


Previous Post Next Post