![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgPFN54z67af2hZCOE6ItbXYtRKwPCjZTiEZ7uBt8KyGuM_-z0uxRDOyyhJ0Uw-8PWSdhv_voWrdNb_zZ9E-Xr9FET9MLE4wXHHO_4MXqHq02qWEiGetAP9WFrl3VzkEw3jQ928sQ6dM3A/s200/01.jpg)
யாழ். மயிலிட்டி, திருப்பூர் ஒன்றியத்தை சேர்ந்த சுப்பையா-பிரதீப் (வயது-40) என்பவர் புலம்பெயர்ந்து பெல்ஜியத்தில் வசித்து வந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்தார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் சிகிச்சை பலனின்றி நேற்று (மே-12) உயிரிழந்துள்ளார். இவரது வீட்டில் உள்ள ஏனைய சிலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் சிகிச்சையின் பின்னர் குணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.