மேலும் 7 கோவிட் -19 நோயாளிகள் சாவு! 116 ஆக உயர்ந்தது உயிரிழப்பு!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
நாட்டில் கோவிட் -19 நோயால் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்று இன்று ஞாயிற்றுக்கிழமை (நவ.29) இரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் நாட்டில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக அதிகரித்துள்ளது.

மினுவாங்கொட – பேலியகொடகொரோனா பரவல் கொத்தணியை அடுத்து கடந்த 9 வாரங்களில் 113 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் நாட்டில் இன்று 502 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டில் ஜனவரி மாதம் முதல் இன்று வரை 23 ஆயிரத்து 484 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 16 ஆயிரத்து 656 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 116 பேர் உயிரிழந்துள்ளனர்.
Previous Post Next Post