வெளிநாடொன்றில் இலங்கைத் தமிழ் இளைஞன் உயிரிழப்பு!

மட்டக்களப்பினை சேர்ந்த இளைஞரொருவர் அவுஸ்திரேலியாவில் திடீரென உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பினை சேர்ந்த 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஸ்ரீராஜ் சந்திரநாதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் தனது வீட்டில் வழுக்கி விழுந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இவரின் மறைவுக்கு நண்பர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
Previous Post Next Post