யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் விபத்தில் உயிரிழப்பு!

மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

அளவெட்டி பகுதியைச் சேர்ந்த குறித்த இளம் குடும்பத்தர் மன்னார் பகுதியில் திருமணம் செய்து மனைவி மற்றும் ஒரு பிள்ளையுடன் வாழ்ந்து வருகின்றார்.

சம்பவ தினம் கடைக்கு சென்று வரும் போது மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

இந் நிலையில் நேற்றைய தினம்  சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் அளவெட்டி பகுதியைச் சேர்ந்த துரைராசா றேமித் (வயது-34) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
Previous Post Next Post