காணாமல் போன இளைஞன் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்பு! (படங்கள்)

புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள தென்னங்காணி ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியைச் சேர்ந்த இராசலிங்கம் சுதர்சன் என்ற 29 வயதுடைய இளைஞன் கடந்த 13 ஆம் திகதியிலிருந்து காணவில்லையென நேற்றைய தினம் உறவினர்களால் போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு காணாமல் போன இளைஞன் இன்று புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் மருத்துவமனைக்கு அருகில் உள்ள தென்னங்காணி ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இறந்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆன நிலையில் குறித்த சடலம் இனங்காணப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் புதுக்குடியிருப்பு போலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post