சகோதரியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சகோதரன் கைது!

மட்டக்களப்புப் பகுதியில் சகோதரியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய சகோதரன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு திராய்மடுப் பிரதேசத்தில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் சந்தேகநபரான சகோதரனை 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த சிறுமியின் தந்தையாரின் முதல் மனைவியின் 20 வயது மகனே சிறுமியான சகோதரியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொற்றோர்களினால் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டினையடுத்தே சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை இளைஞன் வேறுறொரு பெண்ணைத் திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post