சிங்கள மக்களின் யானையால் பறித்தெடுக்கப்பட்ட தமிழர் உயிர்!

காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகிய முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று கிளிநொச்சி முரசுமோட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

இதில் 74 வயது மதிக்கத்தக்க முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

கடந்த 03 மாதங்களுக்கு முன்னர் முரசுமோட்டை 03 ஆம் கட்டைப் பகுதியில் உள்ள உப்புக் காட்டுக்குள் சிங்கள மக்களால் 10 ற்கும் மேற்பட்ட யானைகள் கொண்டு வந்து விடப்பட்டுள்ளது. 

இவ்வாறு விடப்பட்ட யானைகள் குடியிருப்புக்கள், வயல்வெளிகளில் வந்து பாரிய சேதங்களை ஏற்படுத்திச் செல்கின்றது. 

தற்போது நெல் விளைச்சல் காலப் பகுதி என்பதால் வயல்களில் விதைக்கப்பட்டிருந்த நெல்லை உண்பதற்காக வரும் யானைகளில் ஒன்று குறித்த வயோதிபரின் வீட்டிற்குள் நுழைந்து வீட்டில் வைக்கப்பட்டிருந்த நெல்லை சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளது. 

நாய்களின் சத்தம் கேட்டு எழுந்த முதியவர் வீட்டுக்குள் யானை நிற்பதைக் கண்டு அதனை துரத்துவதற்கு முயற்சி செய்த நிலையிலேயே யானை அவரை மதித்து கொலை செய்துள்ளது. 

யானைகள் கொண்டு வரப்பட்டு விடப்பட்ட காடு உப்புக் காடு என்பதால் அதில் யானைகள் தங்காது என்று அப் பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இது தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப் பகுதி மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

Previous Post Next Post