யாழில் 13 வயதுச் சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!

யாழ்ப்பாணம் தெல்லிப்பளைப் பிரதேசத்தில் சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டிருந்தது.

இந் நிலையில் குறித்த சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தெல்லிப்பளை வறுத்தலைவிளான் பகுதியைச் சேர்ந்த வி.ஜே.வினோத் (வயது-13) என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.

கடந்த 27 ஆம் திகதி காணாமல் போயுள்ளான் சிறுவன். இது தொடர்பில் தெல்லிப்பலைப் பொலிஸ் நிலையத்தில் அம்மம்மாவினால் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந் நிலையில் சிறுவன் வீட்டுக்கு அருகில் உள்ள பற்றைக் காட்டில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டான்.

பிரதேச பரிசோதனைக்காக சடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post