ஏ-9 வீதியில் மாட்டுடன் மோதி உயிரிழந்த இளைஞன்! (வீடியோ)

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் எதிரில் வந்த மாட்டுடன் மோதி இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகினர்.

இவ் விபத்துச் சம்பவத்தில் வத்தளையைச் சேர்ந்த கிருபாகரன் துஷ்யந்தன் (வயது-21) என்ற இளைஞன் உயிரிழந்துள்ளதுடன், அவருடன் பயணித்த ரஞ்சித்குமார் என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்துத் தொடர்பான காணொளி அவ் வீதியால் பயணித்த வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த கமராவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post