யாழ்ப்பாணம் குருநகர் ஆழ் கடல் சுழிக்குள் சிக்குண்டு மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
சாவக்காட்டுப் பகுதியைச் சேர்ந்த வடிவேல் வரதன் (வயது-31) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
ஆறு மீனவர்கள் காலை கடலில் வலை வீசச் சென்றுள்ளனர். அதன்போது வரதன் ஆழ் கடலில் சுழி ஓடி வலை வீசியுள்ளார்.
சுமார் 10 நிமிடங்கள் வரை இவர் தென்படாததையடுத்து ஏனைய மீனவர்கள் அவரைத் தேடியுள்ளனர். சிறிது நேரத்தில் இறந்த நிலையில் மிதந்துள்ளார்.
பின்னர் யாழ்ப்பாணம் காவல்துறைக்கு தகவல் வழங்கியதுடன், சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர்.
சாவக்காட்டுப் பகுதியைச் சேர்ந்த வடிவேல் வரதன் (வயது-31) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
ஆறு மீனவர்கள் காலை கடலில் வலை வீசச் சென்றுள்ளனர். அதன்போது வரதன் ஆழ் கடலில் சுழி ஓடி வலை வீசியுள்ளார்.
சுமார் 10 நிமிடங்கள் வரை இவர் தென்படாததையடுத்து ஏனைய மீனவர்கள் அவரைத் தேடியுள்ளனர். சிறிது நேரத்தில் இறந்த நிலையில் மிதந்துள்ளார்.
பின்னர் யாழ்ப்பாணம் காவல்துறைக்கு தகவல் வழங்கியதுடன், சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர்.