யாழில் மதுபோதையில் குழந்தையை தூக்கி எறிந்த நபருக்கு நடந்த கதி!

மதுபோதையில் குழந்தையைத் தூக்கி எறிந்த நபர் ஒருவரை 14 நாட்கள் விளக்கமறியல் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்று இன்று உத்தரவிட்டது.

ஊர்காவற்றுறை, சின்னமாடு, மூன்றாம் வட்டாரப் பகுதியில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தனது உறவினர் வீட்டுக்கு மதுபோதையில் சென்ற நபர் ஒருவர், அங்கு உறங்கிக் கொண்டிருந்த குழந்தையைத் தூக்கியுள்ளார்.

அதை அவதானித்த உறவினர்கள், குறித்த நபரை ஏசியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த நபர் குழந்தையைத் தூக்கி எறிந்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

இதனால் காயமடைந்த குழந்தை ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுப் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post