அனலைதீவுக் கடலில் 11 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது!

யாழ்.தீவகம் அனலைதீவுக் கடற்பரப்பில் எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

அத்துடன் இவர்கள் மீன்பிடி நடவடிக்கைக்குப் பயன்படுத்திய மூன்று ரோலர் படகுகளும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்ஞ மாலை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்படுகின்றனர்.

Previous Post Next Post