யாழில் சுற்றிவளைக்கப்பட்ட விபசார விடுதி! 17 வயது சிறுமி கைது!! (படங்கள்)

யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் பதிவு செய்யப்படாத விடுதி ஒன்றில் கலாசாரச் சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக பிரதேச செயலக அதிகாரிகளால் கண்டறியப்பட்டு அங்கிருந்த 17 வயது நிரம்பிய ஒரு பிள்ளையின் தாயாரான சிறுமி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அந்தச் சிறுமியின் கணவர் என தன்னை அறிமுகப்படுத்தியவரும் அதிகாரிகளால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றுடன் இணைந்து விடுதியும் இயங்கி வந்துள்ளது. எனினும் அந்த விடுதி பதிவு செய்யப்படவில்லை. அந்த விடுதியில் கலாசாரச் சீரழிவு நடவடிக்கை இடம்பெறுவதாக யாழ்.பிரதேச செயலக கலாசார பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

அது தொடர்பில் யாழ்.பிரதேச செயலர் எஸ்.சுதர்சன் தலைமையிலான அதிகாரிகள் அந்த விடுதியை இன்று பிற்பகல் சுற்றிவளைத்தனர். அங்கு தங்கியிருந்த வெள்ளைக் கடற்கரையைச் (சாட்டி) சேர்ந்த 17 வயது நிரம்பிய ஒரு பிள்ளையின் தாயாரும் அவரது கணவர் எனத் தெரிவித்த வெளிமாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரும் அதிகாரிகளால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

அத்துடன் பெண் திருமண வயதடையாததால் அவர்கள் இருவருக்கும் பதிவுத் திருமணம் செய்து வைக்க முடியவில்லை. அதனால் அவர்கள் இருவரும் யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த விடுதியில் வைத்து அந்தச் சிறுமி மூலம் அதிகளவு பணத்தை ஆண் பெற்று வந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

யாழ்.மாநகர சபை பதிவு செய்யப்படாத விடுதிகளை இயங்க அனுமதித்துள்ளமையே இவ்வாறான கலாசாரச் சீரழிவுகளுக்கு வழி வகுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



Previous Post Next Post