யாழில் மகனின் தாக்குதலில் காயமடைந்த தந்தை வைத்தியசாலையில்!

மகனின் கொட்டன் தாக்குதலுக்கு இலக்கான தந்தை ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச் சம்பவம் கொடிகாமம் எருவனில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

காயங்களுக்கு இலக்கான தந்தை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Previous Post Next Post