கொரோனா தொற்று! இன்று மட்டும் 15 பேர் பாதிப்பு!! மொத்தம் 43!!!

இரண்டாம் இணைப்பு:
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 9 பேர் இன்று (17) செவ்வாய்க்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் இலங்கையில் கெரொனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் இன்று மார்ச் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மட்டும் 15 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு:
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஆறு பேர் இன்று (17) செவ்வாய்க்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியராச்சி தெரிவித்தார்.

இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் 204 பேர் வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்படுகின்றனர்.

அத்துடன் மட்டக்களப்பு, வவுனியா உள்ளிட்ட 14 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 2 ஆயிரத்து 258 பேர் தங்க வைத்து கண்காணிக்கப்படுகின்றனர்.

இதேவேளை மார்ச் மாதம் முதலாம் திகதியிலிருந்து 9 ஆம் திகதி வரை வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தோர் சுமார் 300 பேர் நாடு முழுவதும் தங்கியுள்ளனர். அவர்கள் தொடர்பில் பொலிஸ் பதிவுகள் இடம்பெறுகின்றன என்று இராணுவத் தளபதி தெரிவித்தார்.

Previous Post Next Post