நடிகை ராதிகா எனது அம்மா கிடையாது! பரபரப்புக் கிளப்பிய நடிகை வரலட்சுமி!!

நடிகை ராதிகா எனது அம்மா கிடையாது. அவர் எனது அப்பாவின் இரண்டாவது மனைவி அவ்வளவுதான். அவரை நான் ஆன்டி என்றுதான் அழைப்பேன் என நடிகை வரலட்சுமி பரபரப்பாக பேசியுள்ளார்.

தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கிழக்கே போகும் ரயில் எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை ராதிகா சரத்குமார்.

இவர் நடிகர் சரத்குமாரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டதை நாம் அறிவோம். சரத்குமார் அவர்களின் முதல் மனைவியின் மகள்தான் வரலட்சுமி சரத்குமார்.

வரலட்சுமி அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நான் ராதிகா அவர்களை ஆன்டி என்றுதான் அழைப்பேன். ஏனென்றால் அவர்கள் எனது தாய் கிடையாது. அவர் எனது அப்பாவின் இரண்டாவது மனைவி. எனக்கு தாய் என்றால் அது ஒருவர் மட்டும்தான். ஏன் அனைவருக்கும் ஒரேயொரு தாய்தான். அதனால் அவர் எனக்கு அம்மா கிடையாது. அவர் எனக்கு ஆன்டிதான். நான் அவரை எனது தந்தை சரத்குமாருக்கு ஈடாக மரியாதையை வைத்து இருக்கின்றேன் என்று அதிரடியாகப் பேசியுள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

Previous Post Next Post