இலங்கையில் சில பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமுல்!

இலங்கையின் சில பகுதிகளில் இன்று மாலை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்டத்தின் பல இடங்களிலும் நீர்கொழும்பு, கொச்சிக்கடையிலும் இன்று 4.30 மணி முதல் மறு அறிவித்தல் வரையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

புத்தளம் மாவட்டத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளது.

இத்தாலி, தென்கொரியா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எந்தவித மருத்துவ பரிசோதனைக்கும் உட்படுத்தப்படாமல் இந்தப் பகுதியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர்களைக் கண்டு பிடிக்கும் நோக்கில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகப் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

இலங்கையில் ஒரு வாரத்திற்குள் 45 கொரோனா நோயாளர்கள் இனங்ககாணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post