யாழில் பெற்றோரின் கவனயீனத்தால் பறிபோன 13 வயதுச் சிறுவனின் உயிர்! (வீடியோ)

மரம் ஒன்றில் ஏறிய 13 வயதுச் சிறுவன், அதிலிருந்து தவறி வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

இந்தச் சம்பவம் கல்வியங்காடு புதிய செம்மணி வீதியில் இன்று மாலை இடம்பெற்றது.

சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த பாஸ்கரன் மதுமிதன் (வயது-13) என்ற சிறுவனே உயிரிழந்தார்.

சிறுவனின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

பெற்றோர்களின் கவனயீனப் பிழைகள் இவ்வாறான அனர்த்தங்களுக்கு காரணமாக அமைகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post