கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் தப்பி வந்தவர்கள் எந்தெந்த இடத்தைச் சேர்ந்தவர்கள்! விபரம் வெளியாகியது!!

கொழும்பில் கோரோனா வைரஸ் பரவல் அபாய பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் பாரவூர்தியில் யாழ்ப்பாணத்துக்கு தப்பிவந்த 8 பேரும் சாரதியும் யாழ்ப்பாணத்தில் எந்தெந்தப் பகுதிகளைச் சோ்ந்தவா்கள் என்ற விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

அந்தவகையில், குருநகர், பீச் வீதியைச் சேர்ந்த ஒருவர், யாழ்ப்பாணம் ஐந்துசந்தி- ஒஸ்மானியா வீதியைச் சேர்ந்த ஒருவர், சங்கானை- ஓடக்கரையைச் சேர்ந்த ஒருவர், சுழிபுரம் – தொல்புரத்தைச் சேர்ந்த ஒருவர், தெல்லிப்பழை (சந்திக்கு அருகில்) ஒருவர், நாவற்குழி வீட்டுத்திட்டம் பகுதியைச் சேர்ந்த மூவர் மற்றும் புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த சாரதி ஆகிய ஒன்பது பேர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இவா்கள் அனைவரும் நேற்று இரவு இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதி யாழ்ப்பாணத்தில் இருந்து அத்தியாவசிய சேவைக்கான அனுமதிப்பத்திரத்துடன் சென்றுள்ளார். ஏனையவர்கள் தொழில் நிமித்தம் கொழும்பில் தங்கியிருந்து யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளனர்.
Previous Post Next Post